Monday, December 9, 2013

தமிழ் என்னும் அதிசயம்

 தமிழ் என்னும் அதிசயம்!


இன்றைய கணினி மூலம் வாழ் தமிழ் பல கிளைகள் விட்டு பல்கி பெருகி அகண்டதொரு விருட்சமாக வளர்ந்திருந்தாலும் அதன் வளர்ச்சி சற்று கடினமாகவே இருக்கிறது.
பேசுவது மூலமும் எழுதுவது மூலமும் நாம் காலூன்றினாலும், இன்னமும் நம்முள் பலருக்கும் இருக்கும் பெரும் சவால் எழுத்துப்பிழைகள்! குறிலும் நெடிலுமாக நம் தமிழ் கழுத்தினை திருகும் எண்ணற்ற தமிழ் ரசிகர்களும் ஆர்வலர்கள் நிறைந்த நாடல்லவா நம் தமிழ்நாடு ?

பிழை என்பது சாதரணமாக தெரிந்தாலும், படிக்கும் போதோ அது நம் முகம்  சுளிக்க வைக்கும் என்பதே உண்மை. தமிழின் இனிமை பேசுவதில் மட்டும் இல்லை எழுதுவதிலும் இருக்கிறது. எழுத்துப்பிழைகள் இல்லாமல் படிக்கும் பொது அந்த சொல்லில் உள்ள பொருள் விளங்கும் மனதில் பதியும். ஆனால் எண்ணற்ற எழுத்துக்கள் கொண்ட நம் மொழிக்கு ஏற்ப சொல்லாளும் "செல்"லாளர் இல்லையே இப்பொழுது? கல்லுக்கும் கள்ளுக்கும் - KAL என்று தானே  ஆங்கிலத்தில் தட்டச்சு (type) செய்ய முடிகிறது இன்று ?  

நம் தாய்மொழியை விட நாம் அதிகமாக நேசிப்பது, மதிப்பது, பேசுவது இங்கிலீஷ் - ஆங்கிலம். நம்மால் அதை சுலபமாக படிக்கவும், பிழையற  எழுதவும் முடிகிறது. ஆனால் நம் தமிழில் மட்டும் ஏன் பலருக்கு எழுதுவது கடினமாக இருக்கிறது?

இன்றைக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், நம் தமிழ் எழுத்துக்கள் நேர் எழுத்துக்களாக (தொல்காப்பியம் காலம் ) அமைந்து,எத்தனையோ விதமாக மாறி, மருவி இருக்கிறது.பல்லவர்களால் வட்டெழுத்துக்களாக இருந்த தமிழ், 19 நூற்றாண்டில் புதிய வடிவம் பெற்றது.ஆயினும் எழுத்துக்களின் உபயோகிப்பில் இன்றைய நிலை நான் மேற்சொன்ன நிலையில் தான் இருக்கிறது.

என்னுடைய மனைவி வழி சொந்தங்கள் ஏராளமான பேர் மிகவும் நல்ல நிலையில்  இருப்பவர்கள். அதில் நான் மிகவும் மதிக்கும் ஒருவர் என் மனைவியின் பெரியப்பா திரு. ஜெயராமன் அவர்கள். அவர் ஒரு நல்ல மனிதர், சாய் பாபாவின் தீவிர பக்தர், சிறந்த தமிழ் அறிஞர்.  அரசு பள்ளி தலைமை ஆசிரியர், நல்லாசிரியர்.

அவரின் தமிழ் புலமை பற்றி சொல்ல வேண்டும் எனில் ஒரு முறை,என் மனைவிக்கு அவள் சிறு வயதில் பேச்சு போட்டியில் பேசுவதற்காக ஒரு பத்தி எழுதி தந்திருந்தார்.அத்தனை வரிகளும் மணி மணியாக அச்சுகோர்வை அமைத்த்து , அழகான சொற்களால் எழுத பெற்ற அதனை படித்து  முதல் அவர் ரசிகன் ஆனேன் என்று சொல்லலாம்.

சென்ற வாரம் அவர் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அவர் பேத்தி எழுதியிருந்த தமிழ் என்னை சிரிப்புக்குள்ளாக்கியது. சிறு  பிள்ளை, இருந்தாலும் ஏன் இத்தனை பிழைகள் என்று ஒரு எண்ணம் தோன்றியது. அடடே!  இருக்கிறார் புலவர் அவர்கள் என்று அவரிடமே இதை பற்றி கேட்டு விட்டேன்.

இதை பற்றி ஏற்க்கனெவே நிறைய முறை விவாதங்கள் நடந்திருப்பதாக அவர்  கூறினார். அப்போது கணினி வழியில் எழுதும் முறை பரவ வில்லை. electronic typewriter மற்றும் tamil typewriter மட்டுமே  இருந்தது.மாறாக நாம் இப்பொழுது எழுதும், அல்லது தட்டச்சு செய்யும் தமிழ் எழுத்துக்கள் பெரும் பிழைகளையும் வரவைதுள்ளதாக  இருந்ததாம்.(அவர் சொல்லுவது 60,70 ஆம் ஆண்டுகளில் என்பதனை நினைவில் கொள்க).

பொதுவாக எந்த மொழியை எழுதுவதாக இருந்தாலும், எழுதும் முறை என்பது நம் மனக்கண் முன் ஒரு சொல் எழுத்து வடிவம் பெற்ற பின் நம் கை வழியே எழுதுவதற்கு நம் மூளை கட்டளை இடும். நம் ஞாபக சக்தியானது அதிகமான சொற்களினால் மிகவும் குழப்பம் அடையும் பொழுது சொல் எழுத்து வடிவம் பெறாமல் பிழையுடன் கட்டளை இடுகிறது.


ஆங்கிலம் - A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W,X,Y,Z- மொத்தம்  26 எழுத்துக்கள்
தமிழில்      -  அ,ஆ, இ,ஈ,உ,ஊ, எ,ஏ,ஐ,ஒ, ஓ, ஔ, ஃ - மொத்தம் 12+1=13

தமிழ் மெய்யெழுத்து மொத்தம் 18,

ஆக 12 x 18 மொத்தம் 216 உயிர்மெய் எழுத்துக்கள் !

வெறும் 26 எழுத்து கொண்ட ஒரு மொழி அதிகமாக உயிர் வாழ்ந்தால் இத்தனை ஆளுமை பெற்றால், ஏன் 216  எழுத்துக்கள் கொண்ட ஒரு மொழி அதை ஜெயிக்க முடியவில்லை?

காரணம் 26 எழுத்து கொண்ட அது சுலபமாக மனதில் பதிவதால். 216 கொண்ட மொழி தோற்று போயிற்று!
சரி இதன் முடிவுதான் என்ன? என்று அவரிடம் கேட்டேன்.
அவர் கூறுகிறார். இத்தகையதொரு சிக்கலை அன்றிய தமிழ் ஆராய்ச்சியாளர்கள் எதிர்கொண்டது. அப்பொழுது தமிழ் எழுத்துக்களை எவ்வாறு குருக்கலாம் என்றும் எழுத்து பிழை இல்லாமல் செய்யலாம். சாதரணமாக நம்முடைய மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும், இரண்டு "stroke" உடையவை.(ஒரு எழுத்து அதன் மேல் உள்ள ஒரு புள்ளி யை stroke என்று கொள்க). இதன் மூலமே நாம் பழகும் பொது சற்று கடினமாக இருப்பதால் தான் இந்த எழுதுப்பிழை! ஆதலால் இந்த stroke நீக்கி விட்டால் எழுத்து பிழை குறையும் என்றும் இரண்டு எழுது க்கு நாம் எடுத்துக்கொள்ளும் space வெகுவாக குறையும் என்றும் அவர் விளக்கினார்.



உதாரணமாக தமிழில் "ஆடு" என்ற சொல்லை எடுத்துகொள்வோம்
ஆங்கிலத்தில் அதனை எழுதினால் சரியான பதத்தில்

ஆடு - AADU என்று எழுத வேண்டும். (English Phonetics)

அதனை

ஆடு - அ+அ +ட +உ -AADU என்று எழுதிப்பார் என்றார்

ஆச்சரியம்! அதிலும் 4 எழுத்து தமிழிலும் 4 எழுத்து!

இப்படி ஆங்கிலத்தில் எழுதினால் மட்டுமே "ஆடு" என படிக்க முடியும்  என ஆராய்ச்சி செய்தார்களாம்.இல்லையென்றால்  அடு /அது என்று பிழையாகும். இப்படி எழுதும் போது நாம் புதிய எழுத்துக்களின் உபயோகத்தையும்  குறைக்கிறோம்,மாறாக நமக்கு எழுத்து பிழை வராது என்றார். அனேகமாய்  பழைய அச்சு முறையில் எழுத்துக்களை அச்சு கோர்க்கும் போது, ஒரு வரிவிட்டு மெய்யெழுத்துக்களின் மேற்ப் புள்ளிகாக அச்சிடப்படுவதை கவனிக்கலாம். இதனையே அவர் சொல்கிறார் என்று நான் புரிந்து கொண்டேன்.

இந்த புதிய முறையில் எழுதுவது எப்படி என்றால் -
A, E , I , O, U  - அ, எ,இ ,ஓ ,உ - ஐந்தே உயிர் எழுத்துக்கள்!
இதன் படி
AA =அ+அ =ஆ
KA =க +அ = க
KI =க +இ = கி
க்= க =K
ஔ =அ +உ= AU
 
மீதம் உள்ள 18 மெய் எழுத்துக்களின் சேர்வால், எழுதும் அனைத்து  சொற்களும், பிழை இல்லாமல் எழுத வரும். முடிவில் உள்ள எந்த மெய்யெழுத்துக்கும் மேற்புள்ளி இட வேண்டிய தேவையில்லை. இதன் ஆதாரம் பல இலக்கண குறிப்புகளிலும் உள்ளது என்று அவர் விளக்கினார்.

Over the next few centuries, the Chola-Pallava script evolved into the modern Tamil script. The use of palm leaves as the primary medium for writing led to changes in the script. The scribe had to be careful not to pierce the leaves with the stylus while writing, because a leaf with a hole was more likely to tear and decay faster. As a result, the use of the puḷḷi to distinguish pure consonants became rare, with pure consonants usually being written as if the inherent vowel were present. - Reference - Wikipedia http://en.wikipedia.org/wiki/Tamil_script

இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மேலும் ஒரு உதாரணம்.

VAAL- வ +அ +அ+ல.   

அமுதம் - அ+ம+உ+த+அ+ம -AMUTAM
 
"வேல்" என்பது ஆங்கிலத்தில் - VEL என எழுதுகிறோம். ஆனால் ஆங்கில
உச்சரிப்பின் படி "VEL -வெல்" என படிக்கப்படும்.அதனால் ஆங்கிலத்தில் இதனை VEEL என்றோ VEAL என்றோ எழுத வேண்டும். அதன் படி புதிய தமிழில் எழுத்த்தில் - வ+எ +எ+ல என எழுத முடியும்!

வௌவால் = வ+அ +உ +வ +வ +அ +அ +ல = VAUVVAAL.

இப்படி எழுதினால் நமக்கு பிழைகளே வருவதில்லை என்றும் நமக்கு குறைவான எழுத்துக்களே  தேவை என்றும் அவர் விளக்கினார்.மேலும் சம்ஸ்கிருத, கிரந்த, வடமொழி கலப்பினால் நாம் உபயோகிக்கும் சொற்களுக்கு அதன் இன்றைய எழுத்துகளையே பயன் படுத்த வேண்டும் என்று ஒரு தகவலையும் கூறினார். இதனை அவர் நம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும்,  வழக்கம் போல அதனை அவர்கள்  ஏற்க மறுத்து விட்டதாகவும் வருந்தினார்.

தமிழ் மெல்ல சாகாமல் காக்க இப்படியும் பலர் முயலுகின்றனர் என்பதனை நினைத்துக்கொண்டு அவரிடம் நன்றி கூறி கிளம்பினேன்.
அவர் சொல்வது சரியா இல்லையா என்று நாம் நமக்குள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.